பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனம், மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், வருடாந்திர அடிப்படையில் 40% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், வரிக்கு முன்னான லாபமும் 40% உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத நிறைவில், நிறுவனத்தின் நிகர லாபம் மற்றும் வரிக்கு முன்னான லாபம் முறையே 2973 கோடி மற்றும் 4012 கோடியாக பதிவாகியுள்ளது.
நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 24% உயர்ந்து, 7435 கோடி ஆக பதிவாகியுள்ளது. இது பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ், பஜாஜ் பைனான்சியல் செக்யூரிட்டிஸ் உள்ளிட்ட அனைத்து இணை நிறுவனங்களின் கூட்டு வருவாய் ஆகும். மேலும், நிறுவனத்திடம் உள்ள வாராக்கடன் 1.14% சரிவடைந்து, நிகர என்பிஏ 0.41% ஆக பதிவாகியுள்ளது. கடன் வழங்கியதன் மூலம் ஏற்பட்ட இழப்பு 841 கோடியாக பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் சொத்து மதிப்பு 27% உயர்ந்து, 2.31 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.