தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை

March 30, 2024

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவோ,வெளியிடவோ கூடாது என தேர்தல் கமிஷன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஆந்திரா,ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் […]

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவோ,வெளியிடவோ கூடாது என தேர்தல் கமிஷன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஆந்திரா,ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த நாட்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் காலை 7 மணி முதல் இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ஆம் தேதி மாலை 6:30 மணி வரை கருத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் போல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu