தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் விற்பனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகியவற்றில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன் பி ரசாயனம் கலக்கப்பட்டு வருவதால் கர்நாடகா சுகாதாரத்துறை இதன் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதில் கலக்கப்படும் ரோடமைன் பி ரசாயனம் புற்றுநோய் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு காரணமாக அமையும் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆகவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரித்துள்ளது. மேலும் இரசாயனம் சேர்க்கப்படாத பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த மாதம் தமிழ்நாட்டில் ரசாயனம் கலக்கும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்துள்ளது கவனிக்கத்தக்கது.