பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பதை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களின் ஆய்வில் ரோடைமேன் பி என்னும் கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி ஆகும். எனவே இதனை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தமிழக அரசு பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு பஞ்சுமிட்டாய் விற்பனையை தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.