பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு 3ம் தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடம் முன்கூட்டியே சென்றடைகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3ம் தேதி புறப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு ஐந்து நிமிடம் தாமதமாக வந்து சேரும். அதே தேதியில் மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு ஐந்து நிமிடம் தாமதமாக வந்து சேரும் என தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.














