திமுக எம்எல்ஏ பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதனை தொடர்ந்து காலியாக அறிவிக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதி அறிவிப்பு திரும்ப பெற்றிருந்தது. இதனை அடுத்து அமைச்சரவையில் மீண்டும் பொண்முடியை அமைச்சராக்குவதற்காக பரிந்துரை செய்து ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். இந்நிலையில் திமுக எம்எல்ஏ பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து வருவதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.