ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்காளதேசம் எப்போது திரும்புவது என்பதைப் பற்றி எந்த தகவலுமில்லை. வங்காளதேசத்தில் தற்போது முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகிக்கிறது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா மற்றும் 45 பேருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில், வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.