வங்கதேச பிரதமர் ஹசீனா பதவி விலகுகிறார்

August 5, 2024

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நாடு முழுவதும் நேற்று மாலை முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து இராணுவம் அங்கு ஆட்சியில் கைப்பற்றுகிறது […]

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நாடு முழுவதும் நேற்று மாலை முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து இராணுவம் அங்கு ஆட்சியில் கைப்பற்றுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அங்கு நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து அவர் பதவி விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ ஹெலிகாப்டர் வாயிலாக இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்ததாக அந்நாட்டு நாளிதழ் செய்தி ஒன்று கூறியுள்ளது. இது குறித்து வங்கதேச சட்டத்துறை அமைச்சர் கூறுகையில், என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கு என்பது எனக்கே தெரியவில்லை. ஆனால் நிலைமை மோசமாக உள்ளது என்றார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 788

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu