வங்காளதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிஸை இடைக்கால அரசின் தலைவராக நியமனம் செய்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளதால் அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் கலைத்தார். மேலும் இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தளபதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிஸை இடைக்கால அரசின் தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இடைக்கால அரசின் மற்ற உறுப்பினர்கள் மற்ற அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்த பிறகு நியமிக்கப்படுவார்கள் என்று அதிபரின் ஊடக செயலாளர் கூறியுள்ளார்.














