நவம்பர் மாதத்தில், இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடன்களின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நவம்பர் 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாட்களில், இந்திய வங்கிகள் வழங்கிய மொத்த கடன்களின் மதிப்பு 16.96% அதிகரித்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வங்கிகள் அளித்துள்ள கடன்களின் மதிப்பு 13.29 லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், இதே காலகட்டத்தில், வங்கிகளில் செலுத்தப்பட்ட வைப்பு நிதி 177.15 லட்சம் கோடியாக பதிவாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9.3% உயர்வாகும்.
கடந்த வருட நவம்பர் மாதம் 19ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாட்களில், இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடன்களின் மதிப்பு 113.96 லட்சம் கோடியாக இருந்தது. எனவே, வருடாந்திர அடிப்படையில் கடன் அளிப்பு விகிதம் 16.96% உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.