காசா மீது கடுமையான விமானத் தாக்குதலை நடத்தி 400-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
காசாவில் 56,000 உயிரிழப்புக்குப் பிறகு எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1 அன்று முடிவடைந்தது. இதையடுத்து, சமாதான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில், இஸ்ரேல் மீண்டும் காசா மீது கடுமையான விமானத் தாக்குதலை நடத்தி 400-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி பாய்ச்சியதாக ஹவுதி அமைப்பு கூறியது. ஆனால், இஸ்ரேல் விமானப்படை அவற்றை இடைமறித்ததாக அறிவித்துள்ளது. முந்தைய தாக்குதல்களை தொடர்ந்து, ஹவுதிகளை ஒடுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.