செவ்வாய் கிரக பாறைகளில் கரடியின் முகத்தைப் போன்ற தோற்றம் கண்டறியப்பட்டுள்ளது. இது பாறைகள் உருவாக்கத்தின் போது இயற்கையாகவே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட Mars Reconnaissance Orbiter -ல் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், பாறையின் தோற்றம் அச்சு அசலாக கரடியின் முகத்தைப் போன்று உள்ளது. எனவே, இது தொடர்பாக, நாசா ஆய்வு நடத்தி வருகிறது.
இது தொடர்பாக, அரிசொனா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செவ்வாய் கிரகத்தில் உள்ள சிறிய மலைப்பகுதியில் V வடிவ அமைப்பு உள்ளது. இதுவே கரடியின் மூக்கு போல தோற்றமளிக்கிறது. மேலும், இரண்டு கிரேட்டர்கள் உருவாக்கியுள்ளன. அவை கண்களாக காட்சி அளிக்கின்றன. மேலும், அந்தப் பகுதி முழுவதும் மொத்தமாக வட்ட வடிவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இது கரடியின் தலை போல தோன்றுகிறது. மேலும், மூக்கு பகுதி ஒரு எரிமலையாகவும் லாவா குழம்புகளின் படிமமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.