இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் வான்தாக்குதல் நடத்தியதில் மிக முக்கிய மூத்த ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்பில்லா ஆயுத அமைப்பு அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் எல்லையில் லெபனான் அமைந்துள்ளது. ஆகையால் இருவரும் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டிலுள்ள சியாம் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மிக முக்கிய ஹமாஸ் மூத்த தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
ஹிஸ்புல்லா ஆதிக்கம் உள்ள பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதால் பாலஸ்தீன தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் கூறினார். இதற்கிடையே கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பு தலைவர் சலா அருரி என்றும் இவர் ராணுவ பிரிவின் நிறுவனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஹமாசுக்கு எதிராக தொடர்ந்து போரில் கவனம் செலுத்துவோம் என்றும், எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறோம் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.