காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு வார காலமாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் கண்டிப்பாக அழிக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்வது மிகப்பெரிய தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எனினும் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்கும் என்றார். இஸ்ரேலுக்கு ஜோ பைடன் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த போதிலும் தற்போது பாலஸ்தீனத்திற்காகவும் குரல் கொடுத்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.