சேலத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பல புதிய வளர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார்.
சேல மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7600 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சிறப்பாக பணியாற்றுவதாகவும் முதல்வர் புகழ்ந்தார். சேலத்தில் 9 உழவர் சந்தைகள், ரூ.548 கோடியில் சாக்கடை திட்டம், 56 கோவில்களுக்கு குடமுழுக்கு உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சேலத்திற்கு ரூ.100 கோடியில் சாலை மேம்பாடு, செவ்வாப்பேட்டையில் தினசரி சந்தை மேம்பாடு, சங்ககிரி, மேட்டூரில் புதிய கட்டடங்கள், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் திட்டங்கள், தலைவாசலில் வேளாண் மைய மேம்பாடு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.