பட்டியல் நீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் வெளிப்படைத்தன்மை நடவடிக்கை.
பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் எனக் கூறி ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் வெளிப்படைத்தன்மைக்காக விவரங்களை வெளியிட உத்தரவிட்டது. அதன் பேரில் தேர்தல் ஆணையம் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. மக்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்து, தேவையெனில் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஆதார், EPIC நம்பர்கள் செல்லுபடியாக ஏற்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.














