இந்தியாவிலேயே முதன்முறையாக கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற பயோ பிளாக் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
கொடைக்கானலில் சிறப்பு வாய்ந்த நட்சத்திர ஏரியில் கழிவுகள் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. புகாரை அடுத்து ஏரியை ஆய்வு செய்து சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி ஈடுபட்டது. மேலும் ஜப்பானின் பயோ பிளாக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஏரி நீரை நன்னீராக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உதவியுடன் சிறிய தொட்டியை வடிவமைத்து பயோ பிளாக் என்ற உயிரி தொகுதி கற்களை ஏரியில் மிதக்க விட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளது. சோதனை வெற்றி பெற்றதால் நட்சத்திர ஏரியில் 16,000 பயோ பிளாக் கற்களை மிதக்க விட்டு ஏரி நீரை நன்னீராக்க நகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.