திருவனந்தபுரத்தில் பறவைக் காய்ச்சல் - 2 ஆயிரம் வாத்து, கோழிகளை கொல்ல முடிவு

January 9, 2023

திருவனந்தபுரத்தில் 2 ஆயிரம் வாத்து, கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் பெருங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சுருண்டு விழுந்து இறந்தன. அவற்றை பரிசோதனை செய்தபோது அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று […]

திருவனந்தபுரத்தில் 2 ஆயிரம் வாத்து, கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் பெருங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சுருண்டு விழுந்து இறந்தன. அவற்றை பரிசோதனை செய்தபோது அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று முன்தினம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், பறவைக் காய்ச்சல் பரவிய பண்ணையில் உள்ள வாத்து, கோழிகளையும், மேலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வாத்து, கோழிகளையும் கொல்ல தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 2,000 பறவைகளை இன்று முதல் கொல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பண்ணையின் 9 கிலோ மீட்டர் பகுதியில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu