NS-27 விண்கலத்தின் ஜிபிஎஸ் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்கலத்தின் ஆளில்லா ஏவுதல் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அக்டோபர் 7 அன்று இதே விண்கலத்தை ஏவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ராக்கெட்டில் ஏற்பட்ட சிக்கலால் அப்போது ஏவுதல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, விண்கலத்தின் இரண்டாவது முயற்சியும் தாமதமாகியுள்ளது.
NS-27 விண்கலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக பல்வேறு கருவிகளை சுமந்து செல்கிறது. இதில், விண்வெளியில் திசை கண்டுபிடிக்க உதவும் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் நிலவு ஆராய்ச்சிக்கு பயன்படும் லூனார் லிடார் சென்சார் ஆகியவை முக்கியமானவை. இந்த முறை, புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட பூஸ்டர் 5 என்ற ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ராக்கெட், அதிக செயல்திறன் கொண்டதுடன், பல முறை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.