பிஎம்டபிள்யூ நிறுவனம், பேட்டரி-எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மாற்று வழியாக ஹைட்ரஜன் வாகனங்களை அறிமுகம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டொயோட்டாவுடன் இணைந்து, 2028 ஆம் ஆண்டிற்குள் புதிய தலைமுறை எரிபொருள் மூலம் இயங்கும் பவர் ட்ரெயின்களை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஹைட்ரஜன் வாகனங்களால் பேட்டரி-எலக்ட்ரிக் வாகனங்களை விட நீண்ட தூரம் பயணிக்க முடியும். பேட்டரி சார்ஜ் செய்வதை விட எரிபொருள் நிரப்புவது மிகவும் வேகமாக நடைபெறும். தண்ணீரை மட்டுமே வெளியேற்றுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை. இந்த நன்மைகள் இருக்கும் போதிலும், பேட்டரி-எலக்ட்ரிக் வாகனங்களை விட அதிக உள்கட்டமைப்பு செலவு ஏற்படும். எனவே, டொயோட்டாவுடன் இணைந்து செலவுகளைக் குறைக்க பிஎம்டபிள்யூ முயற்சிக்கிறது.