போயிங் நிறுவனம் ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகைக்கு ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி சங்கிலி முழுவதுமாக கையகப்படுத்தப்படுவதாக போயிங் தெரிவித்துள்ளது.
போயிங் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 37.25 அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தப்படுகிறது. அதன்படி, மொத்த பொது பங்குகள் 4.7 பில்லியன் டாலர்களுக்கு வாங்கப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 8.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் கடன் மதிப்பும் அடங்கும். போயிங் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், போயிங் தரப்பில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் சிறப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.