ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்புவது சட்டவிரோதம் - இங்கிலாந்து நீதிமன்றம்

November 16, 2023

இங்கிலாந்துக்கு உரிய ஆவணங்கள் இன்றி வரும் அகதிகளை அனுப்பி வைக்கும் சர்ச்சைக்குரிய திட்டம் சட்டவிரோதமானது என்று இங்கிலாந்து உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இது குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ருவாண்டாவுக்கு அகதிகள் அனுப்பப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிரிட்டனில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ரூவாண்டாவுக்கு அனுப்பினால் அந்த நாடு அவர்களை பாதுகாப்பற்ற மூன்றாவது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் என்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ஆமோதிக்கிறது. எனவே அகதிகளுக்கு […]

இங்கிலாந்துக்கு உரிய ஆவணங்கள் இன்றி வரும் அகதிகளை அனுப்பி வைக்கும் சர்ச்சைக்குரிய திட்டம் சட்டவிரோதமானது என்று இங்கிலாந்து உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இது குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ருவாண்டாவுக்கு அகதிகள் அனுப்பப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிரிட்டனில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ரூவாண்டாவுக்கு அனுப்பினால் அந்த நாடு அவர்களை பாதுகாப்பற்ற மூன்றாவது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் என்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ஆமோதிக்கிறது. எனவே அகதிகளுக்கு ருவாண்டா பாதுகாப்பானது இல்லை என்று அகதிகள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுள்ளது. எனவேதான் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பி வைப்பதற்கான அரசின் முடிவு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு அடைக்கலம் தேடி அகதிகள் ஏராளமானோர் வருகின்றனர்.
இந்நிலையில், இப்படி உரிய ஆவணங்கள் இன்றி வரும் அகதிகளை விமானம் மூலம் ரூவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். அவர்களுடைய விண்ணப்பங்கள் சரிபார்க்கும் வரை அவர்கள் ருவாண்டாவில் சட்டவிரோத அகதிகளாக தங்க வைக்கப்படுவர் என்றும் அவர் கூறினார். இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் தலைமையிலான அரசும் செயல்படுத்தி வருகிறது. எனினும் அகதிகள் நல உரிமை அமைப்பாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்ப்பை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu