தொடர்ந்து 10 வது நாளாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், பங்குச் சந்தையில் புதிய உச்சங்கள் பதிவாகின. ஆனால், அதைத்தொடர்ந்து சரிந்த பங்குச்சந்தை, இறுதியில் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 52.01 புள்ளிகள் உயர்ந்து, 67519 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 33.1 புள்ளிகள் உயர்ந்து, 20103.1 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, யூபிஎல், ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, மஹிந்திரா, நெஸ்லே, மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல், எஸ் பி ஐ ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே சமயத்தில், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, கோல் இந்தியா, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, ஹச் டி எஃப் சி வங்கி ஆகியவை இறக்கமடைந்துள்ளன.