இந்திய பங்குச் சந்தையில் தொடரும் வீழ்ச்சி

January 27, 2023

கடந்த இரு தினங்களாக கடும் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தையில், இன்றும் சரிவுகள் தொடர்ந்துள்ளன. குறிப்பாக, அதானி குழுமம் மீதான விமர்சனங்களால் இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டுள்ளது. அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததுடன், அவை வங்கி தொடர்பான பங்குகளையும் பாதித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 874 புள்ளிகள் குறைந்து, 59330.90 ஆக நிலை கொண்டுள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு […]

கடந்த இரு தினங்களாக கடும் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தையில், இன்றும் சரிவுகள் தொடர்ந்துள்ளன. குறிப்பாக, அதானி குழுமம் மீதான விமர்சனங்களால் இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டுள்ளது. அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததுடன், அவை வங்கி தொடர்பான பங்குகளையும் பாதித்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 874 புள்ளிகள் குறைந்து, 59330.90 ஆக நிலை கொண்டுள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 17650 க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், சன் பார்மா, பஜாஜ் பின்செர்வ் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. டாடா ஸ்டீல், ஏர்டெல், மாருதி, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu