பி.எஸ்.என்.எல். திடீர் லாபம்! 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிகர லாபம் அறிவிப்பு

February 15, 2025

பி.எஸ்.என்.எல். பொதுப் சேவை நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 262 கோடி ரூபாய் ஆக உயர்வு நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.262 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கிடைத்த மிகுந்த சாதனை என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.இந்த சாதனை பற்றி அவர் கூறியுள்ளதாவது, "2007 ஆம் ஆண்டு பிறகு பி.எஸ்.என்.எல். எதுவும் காலாண்டு லாபம் ஈட்டவில்லை. கடந்த […]

பி.எஸ்.என்.எல். பொதுப் சேவை நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 262 கோடி ரூபாய் ஆக உயர்வு

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.262 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கிடைத்த மிகுந்த சாதனை என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.இந்த சாதனை பற்றி அவர் கூறியுள்ளதாவது, "2007 ஆம் ஆண்டு பிறகு பி.எஸ்.என்.எல். எதுவும் காலாண்டு லாபம் ஈட்டவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8.4 கோடி சந்தாதாரர்களின் எண்ணிக்கை இருந்தது, இப்போது டிசம்பர் மாதம் 9 கோடிக்கு அதிகரித்துள்ளது" என்று அவர் கூறினார்.

கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டை ஒப்பிடுகையில், பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையின் வருவாய் 15%, பைபர் இணையசேவையின் வருவாய் 18% மற்றும் தொலைத்தொடர்பு கம்பி வழித்தட குத்தகை வருவாய் 14% அதிகரித்துள்ளது. மேலும், பி.எஸ்.என்.எல். அதன் நிதி செலவு மற்றும் ஒட்டுமொத்த செலவினங்களை குறைத்துள்ளது, இதன் மூலம் கடந்த ஆண்டுக்கான நட்டம் ரூ.1,800 கோடி குறைவடைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu