மகாராஷ்டிராவில் நவி மும்பையில் ஷாபாஷ் கிராமத்தில் மூன்று மாடி கட்டிடம் இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வரும் நிலையில் நவி மும்பையில் உள்ள ஷாபாஸ் கிராமத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள மூன்று மாடி கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று அதிகாலை 3 மணி அளவில் கட்டிடம் இருந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு பேர் மீட்கப்பட்டதாகவும் பலர் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.