பெங்களூரில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்த கனமழை காரணமாக, ஹெண்ணூர் போலீசாரின் பகுதியாகிய பாபுசாப் பாளையத்தில் உள்ள 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் வேலை செய்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். ஹெண்ணூர் போலீசாரும் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டிட விபத்து தொடர்பாக கட்டிடம் உரிமையாளரான மோகன் மற்றும் ஒப்பந்ததாரர் முனியப்பா கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.