சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
கனமழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி போக்குவரத்துகள் இணைப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ஓட்டுனர்கள் தங்கள் பணிகளுக்கும், பணிக்கு செல்வோர் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் திங்கள் கிழமை முதல் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குறைந்த அளவில் பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன் பிறகு 90 சதவீத பேருந்துகளில் சேவை நிறுத்தப்பட்டன. மேலும் மழை தொடர்ந்து செய்து வந்ததால் பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. பின்னர் செவ்வாய்க்கிழமை காலை முதல் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து வழித்தடங்களிலும் வெள்ள நீர் அகற்றப்பட்டு சீரானதை தொடர்ந்து இன்று காலை முதல் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.