குஜராத், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் – பலத்த பாதுகாப்பில் வாக்களிப்பு
நிர்வாக காரணங்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மரணம், ராஜினாமா காரணமாக காலியாகியுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (ஜூன் 19) இடைத்தேர்தல் நடைபெற்றது. குஜராத்தின் காடி, விஸ்வதார், கேரளாவின் நீலாம்பூர், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மற்றும் மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் ஆகிய தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்களிப்பு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களிப்பில் உறுதியாக பங்கேற்றனர். விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 23 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.