பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு 10.79 பில்லியன் டாலர்களை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் 890.47 பில்லியன் ரூபாய் ஆகும்.
பிஎஸ்என்எல் நிறுவனம், இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்க டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதே வேளையில், ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட பிற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் போதிய வசதிகள் இல்லை. எனவே, நிறுவனத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி, கோரிக்கை கோரிக்கை வைக்கப்பட்ட ரூபாயை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியான பின்னர், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகள் 12% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.