ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக அழைப்பு விடுக்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தோனேசியா சென்றுள்ளார். பாலிக்கு புறப்படுவதற்கு முன், ரிஷிசுனக் ஒரு அறிக்கையில் கூறியதாவது: "விளாடிமிர் புதினின் போர் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி உயிர்களை அழித்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. இந்த ஜி20 உச்சி மாநாடு வழக்கம் போல் இருக்காது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மரியாதைக்காக புதினின் ஆட்சியை அகற்ற ஜி20 போன்ற இறையாண்மை மன்றங்களுக்கு அழைப்பு விடுப்போம். இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் உள்ள பொருளாதார சவால்களைத் தீர்க்கவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் செயல்படும்" என்றார்.
ஜி 20 அமைப்பில் இந்தியாவின் ஓராண்டுத் தலைவர் பதவி டிசம்பர் 1 முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜி-20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமரான பிறகு ரிஷி சுனக் மோடியை சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். G20 இன் முதல் முழுமையான அமர்வின் போது சுனக் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.