கனடாவில் செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகளை குறிவைக்கும் சதித்திட்டத்தில் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு இருந்ததாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அமெரிக்க ஊடகத்திற்கு வழங்கிய தகவலின்படி, கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்துறை மூலம் தகவல்களை சேகரிக்க அமித் ஷா உத்திவைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கான தகவல்களை கனடா நாட்டின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.