கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்தால் அவர்கள் கனடாவில் குடியேற தற்காலிக விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாலஸ்தீன மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல், தங்குவதற்கும் இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்தால் அவர்கள் கனடாவில் குடியேற தற்காலிக விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் அங்கிருந்து வெளியேற கனடா அரசு உத்தரவாதம் அளிக்க இயலாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஜனவரி ஒன்பதாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று கன்னட குடிவரவு மந்திரி மார்க் மில்லர் கூறியுள்ளார். அதோடு 600 கனடா நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர கன்னட அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார். கனடா நாட்டை சேர்ந்தவர்களுடைய பெற்றோர், குழந்தைகள் போன்றோரின் விண்ணப்பங்கள் தகுதியுள்ளதாக இருப்பின் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுக்கு மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.