ரஷ்யாவில், கனரா வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை இணைந்து, கமர்சியல் இந்தோ வங்கி என்ற பெயரில் வங்கி சேவையை வழங்கி வருகின்றன. இதில், எஸ்பிஐ க்கு 60% பங்குகளும் கனரா வங்கிக்கு 40% பங்குகளும் உள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரஷ்ய கூட்டு திட்டத்தில், தனக்கு இருக்கும் மொத்த பங்குகளையும் எஸ்பிஐ க்கு விற்பனை செய்ய கனரா வங்கி திட்டமிட்டுள்ளது. சுமார் 114 கோடி ரூபாய்க்கு இந்த பங்கு பரிமாற்றம் நடைபெறுகிறது.
ரஷ்யாவில் செயல்படும் கமர்சியல் இந்தோ வங்கியின் பங்கு பரிமாற்றத்திற்கு ரஷ்யாவின் மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், கடந்த நவம்பர் 11 ஆம் தேதி, கனரா வங்கி மற்றும் எஸ்பிஐ இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர், நவம்பர் 30 ஆம் தேதி, கனரா வங்கி வசம் இருந்த பங்குகள் அனைத்தும் எஸ்பிஐ க்கு மாற்றப்பட்டன. ஆனால், அமெரிக்க டாலர்களில் இந்த வணிகம் மேற்கொள்ளப்படுவதால், இது மார்ச் 31ம் தேதி வரையில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.