யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் இன்றி பட்டப்படிப்புகளை வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை கற்பிக்க யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக் குழு) அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். இருப்பினும், யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் இன்றி பட்டப்படிப்புகளை வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. யு.ஜி.சி.யின் அங்கீகாரம் இல்லாமல் வழங்கப்படும் எந்த உயர்கல்வியும் சட்டபூர்வமாக செல்லாது என்பதோடு, அந்த படிப்புகள் வேலை வாய்ப்புகளுக்கும் […]
சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் இந்த பட்ஜெட்டை வழங்கினார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில், மாநகராட்சி பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழலையர் வகுப்பறைகளில் பாடங்கள், கதைகளை மின்னணு பலகை மூலம் காண்பிக்க ஒவ்வொரு வகுப்புக்கு ரூ.40,000 வழங்கப்படும். மேலும், தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு சுய வேலை […]
கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த பகுதியில் 1.25 லட்சம் விசைத்தறிகள், 10,000 விசைத்தறி கூடங்கள் உள்ளன. கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்கள், கூலி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 7 முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்த தீர்வும் எட்டப்படாததால், இன்று […]
மத்திய அரசு வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குகிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கிறது. 15 சிலிண்டர் வரை பயன்படுத்தியவர்கள் கூடுதல் சிலிண்டர் முன்பதிவு செய்ய முயன்றால், "213 கிலோ எரிவாயு பயன்படுத்தியுள்ளீர்கள்" என எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இதனால், கூடுதல் சிலிண்டர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுவதாவது, “முடிந்த அளவு சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சிலிண்டர் தேவைப்பட்டால், காரணம் விளக்கி […]
இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே 16 முதல் 21 வரை நடக்கிறது. கோடைக்காலம் தொடங்கியவுடன், நீலகிரி மாவட்டம் சுற்றுலாபயணிகளால் நிரம்பி வழியும். இவர்களை மகிழ்விக்க, ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி போன்ற பல கண்காட்சிகள் நடைபெறும். இந்த ஆண்டில் 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே 16 முதல் 21 வரை நடக்கிறது. கோத்தகிரியில் மே 3, 4ஆம் தேதிகளில் 13-வது காய்கறி […]
சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னையில் தெருநாய்களும் வளர்ப்பு நாய்களும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. நடைபயிற்சிக்கு செல்லும் மக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நாய்களின் தாக்குதலால் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்க, சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும், உரிமம் பெற வேண்டும் போன்ற நெறிமுறைகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலானோர் இதை பின்பற்றவில்லை. இதனால், வரும் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.