தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று, தங்கம் ஒரு கிராம் ரூ.8,360 மற்றும் ஒரு சவரன் ரூ.66,880 ஆக விற்பனையாகியது. இன்று, வாரத்தின் தொடக்க நாளில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. தற்போது, தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.8,425 மற்றும் சவரனுக்கு ரூ.67,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி […]
ஜியோ ஹாட்ஸ்டார் புதிய ஸ்ட்ரீமிங் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து புதிய ஸ்ட்ரீமிங் தளம் "ஜியோ ஹாட்ஸ்டார்" ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் 60% பங்குகளை, டிஸ்னி 37% பங்குகளை வைத்துள்ளது. இதில் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் காண முடியும். புதிய பயனர்களுக்கான பிளான்கள் ₹149 முதல் ₹349 வரை உள்ளன. ஜியோ சினமாவில் ஐபிஎல் இலவசமாக பார்க்க முடிந்தாலும், ஜியோ ஹாட்ஸ்டாரில் சந்தா முறைக்கு மாற்றப்படும். […]
இந்திய பங்குச் சந்தையில் தொடர் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் ரூ.27 லட்சம் கோடிக்கும் மேல் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களில் தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக அமர்வுகளில் ரூ.27 லட்சம் கோடியுக்கும் மேல் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 5 அன்று மொத்த சந்தை மூலதனம் ரூ.42,80,3611.66 கோடியாக இருந்தது. ஆனால் அடுத்த 8 வர்த்தக அமர்வுகளில், சந்தையில் சரிவு ஏற்பட்டு, தற்போது ரூ.40,09,9281.11 […]
அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கிய நிதி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா வழங்கிய நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபோது, அவர் மற்றும் எலான் மஸ்க் தலைமையிலான DODGE, தேவையற்ற அரசின் செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் படி, இந்தியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் (182 கோடி ரூபாய்) […]
அமெரிக்காவில் 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிநீக்கப்பட்டனர். அமெரிக்காவில், புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிநீக்கப்பட்டனர். டிரம்பின் ஆதரவாளரான எலான் மஸ்க் தலைமையிலான DODGE துறை, அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, USAID மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் பணிநீக்கங்களை பரிசீலித்தது. உள்துறை, எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நோய் கட்டுப்பாடு மையம், எரிசக்தி துறை, […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.