அக்டோபர் மாத தொடக்கத்தில், கால்நடைகளால் 200 ரயில்கள் சேதம் அடைந்துள்ளன - இந்தியன் ரயில்வே

October 31, 2022

சமீப காலமாக, கால்நடைகள் ரயில்களில் மோதுவதால் நிறைய விபத்துக்கள் பதிவாகின்றன. அண்மையில், மும்பை வந்தே பாரத் ரயில், கால்நடை மோதியதால் 15 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த ரயிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில், இவ்வாறான விபத்துகள் குறித்து இந்தியன் ரயில்வேயின் அறிக்கை கூறுவதாவது: “அக்டோபர் மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும், 200 ரயில்கள் கால்நடைகளால் சேதமடைந்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை, 4433 ரயில்கள் இது போன்று சேதம் அடைந்துள்ளன” […]

சமீப காலமாக, கால்நடைகள் ரயில்களில் மோதுவதால் நிறைய விபத்துக்கள் பதிவாகின்றன. அண்மையில், மும்பை வந்தே பாரத் ரயில், கால்நடை மோதியதால் 15 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த ரயிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில், இவ்வாறான விபத்துகள் குறித்து இந்தியன் ரயில்வேயின் அறிக்கை கூறுவதாவது: “அக்டோபர் மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும், 200 ரயில்கள் கால்நடைகளால் சேதமடைந்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை, 4433 ரயில்கள் இது போன்று சேதம் அடைந்துள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள், “கால்நடைகள் நடமாடும் பெரும்பாலான பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இது போன்ற நிகழ்வுகளை முழுமையாக கட்டுப்படுத்துவது இயலவில்லை” என்று தெரிவித்துள்ளனர். மேலும், கால்நடைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் 40% பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில், முழுமையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதுகுறித்து பேசிய ரயில்வே துறை அதிகாரி அமிதாப் ஷர்மா, “ரயில் பாதைகளில் கால்நடைகள் குறுக்கிடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில் பாதைகளின் அருகில் உள்ள கிராமப் பகுதி மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கால்நடைகளால் மிகவும் பாதிப்புக்குள்ளான ரயில்வே மண்டலமாக வடக்கு ரயில்வே மண்டலம் அறியப்படுகிறது. இங்கு, கடந்த 2020-21 ஆம் ஆண்டில், 6800 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கால்நடைகளால் ஏற்பட்ட பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில், ஒட்டுமொத்தமாக இந்தியாவில், 26,000 நிகழ்வுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. வடக்கு மண்டலத்துக்கு அடுத்த நிலையில், மத்திய வடக்கு ரயில்வே மண்டலம் உள்ளது. இங்கு, 6500 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அத்துடன், 3 வந்தே பாரத் ரயில்கள் இந்த இரு மண்டலங்களில் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த ரயில்களில் ஏற்படும் விபத்துக்களால் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu