ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிகப் பிரிவு, மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை கையகப்படுத்தியது. தற்போது இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கைக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தி காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா, இந்த ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தின் 100% இந்திய வர்த்தகத்தை 2850 கோடி ரொக்கப் பணத்திற்கு கையகப்படுத்தியது. தற்போது, 3 மாதங்கள் கழித்து, அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் உள்ள மெட்ரோ விற்பனையகங்கள், ரிலையன்ஸ் குழுமத்தால் முழுமையாக இயக்கப்பட உள்ளது. பெரும்பான்மையான மெட்ரோ விற்பனையாகங்கள் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளதால், ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வணிகப்பிரிவில் மிகப்பெரிய உயர்வு காணப்படலாம் என்று கூறப்படுகிறது.