அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும் பொது மக்களின் பாதுகாப்பாகவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட உள்ளது.
அவசர காலங்களில் மக்களை எச்சரிக்கும் விதமாக செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை இன்று நடைபெறுகிறது. இது பேரிடர் காலங்களில் அவசர தொடர்பு கொள்வதற்காக மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசு தொலைத் தொடர்பு துறையுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் அனைத்து செல்பேசிகளுக்கும் இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையும் படி வசதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி, வெள்ளம், பூகம்பம் ஆகிய காலங்களில் ஒரே நேரத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.