சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு, சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து காக்கும் பொருட்டு, ரூ.561.29 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல் தவணையாக ரூ.150 கோடி நிதி வெளியிடப்பட்டுள்ளது. மொத்தத் திட்டச் செலவில் பாதித் தொகையான ரூ.500 கோடியை மத்திய அரசே ஏற்கும். மீதமுள்ள தொகை இரண்டாம் தவணையாக வழங்கப்படும்.இந்த திட்டத்தின் மூலம் சென்னை நகரம் வெள்ள பாதிப்பை தாங்கும் திறன் கொண்ட நகரமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.