நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை ஏற்படக்கூடும்.இதனால் தமிழகத்தில் சில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் உறை பனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.