தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்

September 4, 2023

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களில் திருவள்ளுவர் உள்ளிட்ட  ஒன்பது மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் ஒரு சில  இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில்  அடுத்த ஐந்து நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக […]

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களில் திருவள்ளுவர் உள்ளிட்ட  ஒன்பது மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் ஒரு சில  இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில்  அடுத்த ஐந்து நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இரவு அல்லது புதன்கிழமை காலை வடகிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் சில இடங்களில் கன மழை பெய்ய கூடும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நீலகிரி, கோவை, தேனி,திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும்.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மற்ற இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu