சந்திரயான் 3 - லூனார் நைட் நெருங்குவதால் ஸ்லீப் மோடுக்கு செல்லும் பிரக்யான் ரோவர்

September 4, 2023

சந்திரயான் 3 திட்டம் கிட்டத்தட்ட நிறைவு பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, நிலவில், ‘லூனார் நைட்’ எனப்படும் சூரியன் மறைவு நிகழ்வு நெருங்குவதால், பிரக்யான் ரோவர் ஸ்லீப் மோடுக்கு செல்ல உள்ளது. எனவே, சந்திரயான் 3 ஆய்வுகள் நிறுத்தப்பட உள்ளன. நாசா தெரிவித்துள்ள தகவலின் படி, செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நிலவில் சூரியன் மறைகிறது. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதியே சூரிய உதயம் நிகழ உள்ளது. சந்திரயான் 3 தரையிறங்கியுள்ள நிலவின் தென் துருவப் பகுதியில், […]

சந்திரயான் 3 திட்டம் கிட்டத்தட்ட நிறைவு பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, நிலவில், ‘லூனார் நைட்’ எனப்படும் சூரியன் மறைவு நிகழ்வு நெருங்குவதால், பிரக்யான் ரோவர் ஸ்லீப் மோடுக்கு செல்ல உள்ளது. எனவே, சந்திரயான் 3 ஆய்வுகள் நிறுத்தப்பட உள்ளன.

நாசா தெரிவித்துள்ள தகவலின் படி, செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நிலவில் சூரியன் மறைகிறது. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதியே சூரிய உதயம் நிகழ உள்ளது. சந்திரயான் 3 தரையிறங்கியுள்ள நிலவின் தென் துருவப் பகுதியில், இந்த நிகழ்வு செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 22 வரை இருக்கலாம் என தோராயமாக கூறப்பட்டுள்ளது. எனவே, பிரக்யான் ரோவர் ஸ்லீப் மோடுக்கு அனுப்பப்படுகிறது. ஸ்லீப் மோடுக்கு செல்ல உள்ளதால், பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிலவின் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோவர் மட்டுமல்லாது விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடில் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் பணிகள் நிறைவு பெற்றதாகவே கருதப்பட்டாலும், இஸ்ரோ விஞ்ஞானிகள் அதனை நீடித்த பயன்பாட்டுக்கு தயார் செய்துள்ளனர். அதன்படி, மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், இந்த கருவிகளின் சாதனங்கள் தாங்கு திறனுடன் செயல்படும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu