விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மேல் எழும்பி தரை இறங்கியது - இஸ்ரோ

September 5, 2023

நிலவில் இரவு நேரம் தொடங்கியதால், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டும் ஸ்லீப் மோடுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, விக்ரம் லேண்டரை மேல் எழுப்பி தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. அதன்படி, லேண்டர் எஞ்சினை இயக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அதற்கு, லேண்டர் உடனடியாக செயல்பட்டு, 40 மீட்டர் உயரத்துக்கு மேலே எழும்பியது. அதன் பிறகு, 30 […]

நிலவில் இரவு நேரம் தொடங்கியதால், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டும் ஸ்லீப் மோடுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, விக்ரம் லேண்டரை மேல் எழுப்பி தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. அதன்படி, லேண்டர் எஞ்சினை இயக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அதற்கு, லேண்டர் உடனடியாக செயல்பட்டு, 40 மீட்டர் உயரத்துக்கு மேலே எழும்பியது. அதன் பிறகு, 30 முதல் 40 சென்டிமீட்டர் தொலைவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எதிர்காலத்தில், நிலவில் ஆய்வுகளை நிறைவு செய்து மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் விண்கலங்களை வடிவமைப்பதில் இந்த சோதனை முக்கியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கும் இந்த சோதனை முக்கியமானதாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu