ஆகஸ்ட் 2023 ல் சந்திரயான் 3 செயல்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

December 30, 2022

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக இந்தியாவால் செயல்படுத்தப்படும் சந்திரயான் 3 திட்டம், வரும் ஆகஸ்ட் மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அமைப்பின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மாநாடு ஒன்றில் பேசிய அவர், “சந்திரயான் 2 திட்டத்தை விட முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சந்திரயான் 2 -ன் தொடர்ச்சியாக இருக்கும். கடந்த ஜூலை 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் லேண்டர் விக்ரம் பாதுகாப்பான முறையில் […]

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக இந்தியாவால் செயல்படுத்தப்படும் சந்திரயான் 3 திட்டம், வரும் ஆகஸ்ட் மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அமைப்பின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மாநாடு ஒன்றில் பேசிய அவர், “சந்திரயான் 2 திட்டத்தை விட முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சந்திரயான் 2 -ன் தொடர்ச்சியாக இருக்கும். கடந்த ஜூலை 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் லேண்டர் விக்ரம் பாதுகாப்பான முறையில் தரை இறங்கவில்லை. ஆனாலும், இந்த திட்டம் வெற்றிகரமானதாகவே இருந்தது. நிலவு குறித்த இந்தியாவின் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது” என்று கூறினார்.

மேலும், விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் பல செய்திகளை இந்த நிகழ்வில் பதிவிட்டார். குறிப்பாக, டிசம்பர் 2024 இல் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu