தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்க பட உள்ளதால் அக்டோபர் 17ஆம் தேதி வரை சென்னையில் இரண்டு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
அக்டோபர் 4-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை இரவு 11:59 மணிக்கு இயக்கப்படும் சென்னை கடற்கரை - தாம்பரத்திற்கு இடையேயான மின்சார ரயிலும், இதே தடத்தில் அக்டோபர் 8- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் என 2 ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.தாம்பரம்- சென்னை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அக்டோபர் 4- ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரையிலும், இதே தடத்தில் அக்டோபர் 8- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.