அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் ரயில்களானது இன்று ரத்தானது.
சென்னை சென்ட்ரல் அரக்கோணம் அருகே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால் அங்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. காலை 10 மணியிலிருந்து 2 மணி வரை சென்னைக்கு செல்லும் மின்சார ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் அனைத்தும் பயணிகளுக்கு முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்ல ரயில் நிலையத்திற்கு டிக்கெட் வழங்கப்படாது என ஊழியர்கள் தெரிவித்தனர். இன்று காலை நான்கு மணி நேரம் ரயில் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.