நேற்று முதல் சென்னை - அயோத்தி இடையே நேரடி விமான சேவை தொடங்கியது.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 22ஆம் தேதி செய்யப்பட்டது. இதனை அடுத்து 23ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அயோத்திக்கு சென்னையிலிருந்து நேற்று முதல் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த விமானத்தின் பயண கட்டணம் ரூபாய் 6000 முதல் 7000 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருவருக்கு ரூபாய் 52,134 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் அயோத்திக்கு செல்லலாம் என்றும் முடிவு செய்து இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.