சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் 1945 அட்டவணை "X" மற்றும் "H","H1" Drugs குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் நேற்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.