சென்னை லீலா பேலஸில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை லீலா பேலஸில் இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி நடைபெற உள்ளது. இதில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டியின் மொத்த பரிசு தொகையாக ரூபாய் 50 லட்சம் வழங்கப்பட உள்ளது.